என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பச்சையப்பன் கல்லூரிக்கு கத்தியுடன் சென்ற 5 மாணவர்கள்: முன்னெச்சரிக்கையாக 70 பேர் சஸ்பெண்ட்
Byமாலை மலர்22 Sep 2016 9:48 AM GMT (Updated: 22 Sep 2016 9:48 AM GMT)
பச்சையப்பன் கல்லூரிக்கு கத்தியுடன் 5 மாணவர்கள் சென்றுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக 70 மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னை:
சென்னையில் உள்ள குறிப்பிடத்தகுந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பச்சையப்பன் கல்லூரியும் ஒன்று. மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்த கல்லூரி மாணவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டு போராட்டம் நடத்துவார்கள்.
இதைபோல் மாணவர்களுக்கிடையில் மோதலும் அடிக்கடி நிகழ்வது உண்டு. இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்களில் 5 பேர் கைத்தியுடன் வந்துள்ளனர். இதுகுறித்த விஷயம் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த மாணவர்கள் பிடிபட்டனர். அத்துடன் ஏராளமான மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் முன்னெச்சரி்க்கை நடவடிக்கையாக கல்லூரி நிர்வாகம் 70 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் இன்று மதியம் முதல் நாளை வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. மாணவர்கள் கத்தியுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள குறிப்பிடத்தகுந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பச்சையப்பன் கல்லூரியும் ஒன்று. மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்த கல்லூரி மாணவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டு போராட்டம் நடத்துவார்கள்.
இதைபோல் மாணவர்களுக்கிடையில் மோதலும் அடிக்கடி நிகழ்வது உண்டு. இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்களில் 5 பேர் கைத்தியுடன் வந்துள்ளனர். இதுகுறித்த விஷயம் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த மாணவர்கள் பிடிபட்டனர். அத்துடன் ஏராளமான மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் முன்னெச்சரி்க்கை நடவடிக்கையாக கல்லூரி நிர்வாகம் 70 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் இன்று மதியம் முதல் நாளை வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. மாணவர்கள் கத்தியுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X