search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்
    X

    சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்

    சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணிநேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உரம் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்டது. இதையடுத்து கொல்லம் - எர்ணாகுளம் வழியாக செல்லும் 6 ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தடம் புரண்ட சரக்கு ரெயில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவேறவில்லை. இதனால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது.

    இன்று காலை குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு காலை 5.15 மணிக்கு வரவேண்டும். ஆனால் அந்த ரெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. பின்னர் 3 மணி நேர தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் வந்தது.

    பயணிகளிடம் ரெயில் தாமதம் குறித்து முன் அறிவிப்பு தெரிவிக்கவில்லை. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் கைக்குழந்தைகளோடு வந்த பெண்களும் கடும் அவதிப்பட்டனர். நேற்றும் இதுபோல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக ஹப்பாவுக்கு செல்லும் ரெயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×