search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் உதவி செய்வது போல் நடித்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
    X

    வேதாரண்யத்தில் உதவி செய்வது போல் நடித்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

    வேதாரண்யம் அருகே உதவி செய்வது போல் நடித்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கனிமொழி (40). ரவிச்சந்திரன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டுக்காரரான கோபாலகிருஷ்ணன் மகன் சுப்பிரமணியன் என்பவர் கனிமொழிக்கு தேவையான சிறு உதவிகளை செய்து வந்தார்.

    இந்நிலையில் 7-ந் தேதி வீட்டில் கேஸ் சிலிண்டர் இணைப்பதற்காக சுப்பிரமணியனை. கனிமொழி கூப்பிட்டுள்ளார். அங்கு சென்ற அவர் கேஸ் சிலிண்டரை இணைத்துள்ளார். பின்னர் கனிமொழியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து கனிமொழி சத்தம் போட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி மலேசியாவில் உள்ள கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது கணவரும் உடனடியாக சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து கனிமொழி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுப்பிரமணியனை தேடி வருகிறார்.
    Next Story
    ×