search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை: ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு
    X

    பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை: ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு

    சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:

    ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இம்மனுவினை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.

    இதையடுத்து, இது தொடர்பான மனு, சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இம்மனு விசாரணைக்கு வருகிறது.

    ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க ராம்குமார் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று, பிரேத பரிசோதனையை நிறுத்திவைப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×