search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதல்: 3 பேர் பலி
    X

    டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதல்: 3 பேர் பலி

    கோயம்புத்தூரில், டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    திருப்பூர்  மாவட்டம், காங்கேயத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேட்டாங்காட்டுவலசு பகுதியில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடையில், சிலர் மது வாங்க நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, மதுவாங்க நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×