search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு மற்றும் மனை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய ஆவணங்கள்
    X

    வீடு மற்றும் மனை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய ஆவணங்கள்

    புதிய சூழ்நிலையில் நம்மால் வாங்கப்படும் வீட்டு மனையின் பின்புலம் மற்றும் இதர அம்சங்கள் பற்றி கவனம் செலுத்துவது பற்றி சட்ட வல்லுனர்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
    வாழ்க்கைக்கான ஆதாரமாக கருதப்படும் சொந்த வீட்டு கனவுக்கான முதல்படி மனை வாங்குவது என்று சொல்லலாம். இன்றைய சூழலில் வீட்டு மனைகளை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், புதிய இடத்தில், புதிய சூழ்நிலையில் நம்மால் வாங்கப்படும் வீட்டு மனையின் பின்புலம் மற்றும் இதர அம்சங்கள் பற்றி கவனம் செலுத்துவது பற்றி சட்ட வல்லுனர்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவற்றை பற்றிய குறிப்புகளை கவனிப்பதோடு, கச்சிதமாக அவற்றை பரிசோதிப்பதும் அவசியம்.

    1. இடம் அல்லது வீட்டு மனைக்கான ஆதார ஆவணங்கள் 3 அடிப்படைகள் கொண்டது. அதாவது, நிலத்தின் முந்தைய உரிமையாளரின் ஆவணம், பிளாட் புரமோட்டரிடம் உள்ள ஆவணம் மற்றும் கட்டுமான நிறுவனத்துக்கும், வீட்டுமனையின் உரிமையாளருக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்த பத்திரம்.

    2. பட்டா என்பது மனை உரிமையாளருக்கு மனையின் மீதுள்ள உரிமையை குறிக்கும் சட்ட ரீதியாக உள்ள அரசின் பதிவேடு ஆகும். பல நிலைகளில் அவசியம் மிக்கதாக உள்ள பட்டாவை முதலில் கவனிக்கவேண்டும்.

    3. நிலத்தின் அசல் பத்திரத்தில் ஏதேனும் உயில் சம்பந்தம் உள்ளதா..? அப்படி இருப்பின் உயில் குறித்த நகல்கள் உள்ளதா..? அல்லது மற்றொருவருக்கு மனையின் முந்தைய உரிமையாளரால் பாத்தியதை தரப்பட்டுள்ளதா..? என்பதை அறியவேண்டும்.

    4. மனையின் ஒட்டு மொத்த நிலப்பகுதி வேறொரு நில உரிமையாளரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் அதன் பிரிவு ஒப்பந்தம், நில உரிமையாளரால் வேறு யாருக்காவது உரிமை தரப்பட்டுள்ளதா..? என்பதையும் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும்.

    5. மனையின் உரிமையானது உயிலின் மூலம் பெறப்பட்டதாக இருப்பின், அதன் முந்தைய நிலை மற்றும் எவ்வகையில் அது உரிமையாளரின் உயிலாக மாறியது..? என்பதற்கான முறையான சான்று அவசியம்.



    6. மனையானது புரமோட்டரால் வேறொருவரிடம் இருந்து வாங்கப்பட்டதாக இருப்பின், அதற்கான ஒப்பந்தம் மற்றும் அதன் நகல் சோதனை ஆகியவற்றோடு, தாய்ப்பத்திரத்தின் ஒரிஜினல் உள்ளிட்ட பிற சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சரிபார்ப்பது அவசியம்.

    7. 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் சொத்து வாங்கும் நாள் வரை பெறப்படுவதோடு, மனைக்கான பட்டா விற்பவரிடமிருந்து மனையை வாங்குபவர் பெயருக்கு மாற்றலாகியிருக்க வேண்டும்.

    8. மனை நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டதா..?, தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக அரசு அனுமதி பெற்றதா..? போன்ற தகவல்களை தக்க அரசு அலுவலகம் மூலம் அறியவேண்டும்.

    9. குடியிருப்புகள் அமைக்க சி.எம்.டி.ஏ-வின் சர்வே எண் மனைக்கு உள்ளதா..? மற்றும் ஏற்கனவே அந்நிலத்தில் ஒருவர் குடியிருந்திருப்பின் அவருக்கும் நில உரிமையாளருக்கும் உள்ள ஒப்பந்தந்தின் நிலை ஆகியவற்றை கவனிக்கவேண்டும்.

    10. சம்பந்தப்பட்ட மனைப்பகுதியில் அரசின் கையகப்படுத்தும் திட்டம் ஏதேனும் வர உள்ளதா..? மற்றும் கட்டுமானத்திட்டம் மற்றும் கட்டுமான பெர்மிட் பெறப்பட்டுள்ளதா? என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

    11. பெருநகர வளர்ச்சி குழுமத்தால் அளிக்கப்பட்ட கட்டுமான நிறைவு சான்றிதழ், சென்னை மாநகராட்சியால் தரப்பட்ட சான்றிதழ் உள்ளிட்ட சி.எம்.டி.ஏ அளித்துள்ள அனைத்து ரசீதுகள் ஆகியவற்றையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.
    Next Story
    ×