என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புகைப்பிடிக்கும் பெண்களுக்கு வரும் ஆபத்துகள்
Byமாலை மலர்10 Jan 2018 3:43 AM GMT (Updated: 10 Jan 2018 3:43 AM GMT)
பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.
தற்போது உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டு மோகத்தால் ஆண்களும், பெண்கள் பல்வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம். பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்று நோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.
சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் டல்லாகி, விரைவிலேயே முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.
புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும், உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.
பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.
பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
* சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவாக சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X