என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்ப்ப காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம்
Byமாலை மலர்13 Oct 2017 6:50 AM GMT (Updated: 13 Oct 2017 6:51 AM GMT)
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் உண்டாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுமே ஓரளவு இயல்பானவைதான். கர்ப்ப காலத்தின்போது தாயின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், வயிற்றில் உள்ள கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வயிற்றுப்போக்கு திடீரென ஏற்படுகிறது என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஏதேனும் பிரச்சனை இருக்கக்கூடும்.
அசுத்தமான தண்ணீரை குடிக்கும்போதும் அதில் சமைக்கும்போதும் அதில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களாலும் பிரச்சனை வந்திருக்கலாம். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துங்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி அவசியப்பட்டால் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளுங்கள்.
உடலுக்கு குளுக்கோஸை வழங்கும் இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும்போது அது குழந்தையையும் சோர்வாக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
கர்ப்பிணிகள் வேலையே செய்யக்கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. உண்மையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே அலைச்சல், கடின உடல் உழைப்பு, பயணம் போன்றவை இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். சோர்வாக இருந்தால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டுச் செய்யலாம். தினசரி ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்பிணிகள் வேலையே செய்யக் கூடாது என்பது தவறான கருத்து.
அசுத்தமான தண்ணீரை குடிக்கும்போதும் அதில் சமைக்கும்போதும் அதில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களாலும் பிரச்சனை வந்திருக்கலாம். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துங்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு ஏற்படும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி அவசியப்பட்டால் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ளுங்கள்.
உடலுக்கு குளுக்கோஸை வழங்கும் இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் சோர்வடையும்போது அது குழந்தையையும் சோர்வாக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
கர்ப்பிணிகள் வேலையே செய்யக்கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. உண்மையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே அலைச்சல், கடின உடல் உழைப்பு, பயணம் போன்றவை இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். சோர்வாக இருந்தால் சிறிது ஓய்வு எடுத்துவிட்டுச் செய்யலாம். தினசரி ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்பிணிகள் வேலையே செய்யக் கூடாது என்பது தவறான கருத்து.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X