என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பிரசவத்திற்கு பின் தாய்ப்பால், உடல் எடையில் கவனம் செலுத்தும் பெண்கள்
Byமாலை மலர்9 Sep 2017 4:48 AM GMT (Updated: 9 Sep 2017 4:48 AM GMT)
பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பாலை அதிகரிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
பெண்கள் கர்ப்பகாலத்தில், குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தங்களை பற்றி கவலைப்படுவதே கிடையாது. உண்மையில் கர்ப்பகாலத்தை விட குழந்தை பிறந்த பின்னர் தான் தாய்க்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. தாய்ப்பாலை அதிகரிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். எனவே தாய் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்காக முன்பை விட கூடுதலாக 300 முதல் 500 கலோரிகள் அதிமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கண்டதையும் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு வீட்டில் உள்ள நெறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால், அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களை சுற்றி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே இருக்கும் விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை உடல் எடை தான். இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பது தான். தாய்ப்பால் கொடுப்பதனால், உடலில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு உங்களது உடல் எடை நாளடைவில் கட்டுக்குள் வந்துவிடும்.
கர்ப்பகாலத்தில், பிரசவம் நல்ல முறையில் நடக்க மருத்துவர் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய கூறியிருப்பார். அதனை பிரசவத்திற்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை, மாலை என இருவேளைகள் நடைப்பயிற்சி மேற்க்கொள்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை மட்டுமே சாப்பிடாமல், வகைவகையாக சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் உங்களது உணவில் இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். எனவே தாய் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்காக முன்பை விட கூடுதலாக 300 முதல் 500 கலோரிகள் அதிமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கண்டதையும் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு வீட்டில் உள்ள நெறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால், அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களை சுற்றி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே இருக்கும் விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை உடல் எடை தான். இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பது தான். தாய்ப்பால் கொடுப்பதனால், உடலில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு உங்களது உடல் எடை நாளடைவில் கட்டுக்குள் வந்துவிடும்.
கர்ப்பகாலத்தில், பிரசவம் நல்ல முறையில் நடக்க மருத்துவர் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய கூறியிருப்பார். அதனை பிரசவத்திற்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை, மாலை என இருவேளைகள் நடைப்பயிற்சி மேற்க்கொள்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை மட்டுமே சாப்பிடாமல், வகைவகையாக சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் உங்களது உணவில் இருக்க வேண்டியது அவசியம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X