search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு உள்ளதா?
    X

    மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு உள்ளதா?

    மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருத்தரிக்கும் தன்மைகள் உள்ளதா என்பது குறித்து பல சந்தேகங்கள் பெண்களுக்கு உள்ளது. அதற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
    பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.

    ஏனெனில் பெண்களின் மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது.ஏனென்றால் அவர்களுக்கு கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்திகள் மற்றும் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புகள் குறைந்து விடுகிறது.

    ஆனால் தற்போதைய காலத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்ற தொழில்நுட்பம் காரணமாக இன்றைய காலத்தில் உள்ள பெண்களின் குழந்தை பேறுக்கு என்று வயது வரம்பு இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் பெண்கள் தங்களின் மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தையை உருவாகச் செய்கின்ற புதிய சிகிச்சை முறைகள் பிரபலமாகி வருகின்றது.

    பெண்களின் மாதவிடாய்க்கு பிறகு கருத்தரிப்பை ஏற்பட செய்வது எப்படி?

    ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்திகள் இருக்கும். ஆனால் பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு கருமுட்டையின் உற்பத்தி நின்று விடும்.

    எனவே பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் அவர்களின் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். அந்த கர்ப்பப்பை சுருங்குவதை தடுப்பதற்கு, ஹெச்.ஆர்.டி. எனப்படும் ஹார்மோன் சிகிச்சையை கொடுத்து, மீண்டும் அவர்களுக்கு மாதவிடாயை வர செய்வார்கள்.

    பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்து, பின் அதை பெண்ணின் கருப்பையில் செலுத்தி கருவை வளரச் செய்வார்கள்.

    ஆனால் பெண்களுக்கு செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு முன்பாக அவர்களின் உடல் மற்றும் கர்ப்பப்பை, சிறுநீரகம், இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    மேலும் இந்த சிகிச்சை முறையினால் சிலருக்கு புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஹெச்.ஆர்.டி என்ற சிகிச்சையை செய்து கொள்ளும் பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்வார்கள். ஆனால் இந்த சிகிச்சையை அனுபவம் உள்ள மருத்துவர்களிடன் பெற்றுக் கொள்வதே நல்லது.
    Next Story
    ×