search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • வீட்டு உபயோகப்பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
    • தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    சருமத்துக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோகப்பொருகளை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

    தினமும் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சருமப் பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வித்திடும்.

    ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த செயல்முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். `பளிச்' தோற்றத்தையும் தரும்.

    ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குழைத்து முகத்தில் பூசவும். அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.

    • தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன.
    • வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும்.

    சருமத்துக்கு அழகு சேர்ப்பதற்கு அழகுசாதனப் பொருட்களை சார்ந்திருப்பதால் மட்டும் பலன் கிடைக்காது. உண்ணும் உணவுப்பொருட்களும் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களில் சிலவற்றை பார்ப்போம்.

     தக்காளி:

    தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு பளபளப்பை அளிக்கக்கூடியவை. தக்காளியை `ஸ்கிரப்பாக' சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு உதவும். சருமத் துளைகள் அதிகம் இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் தக்காளி உதவும்.

     டார்க் சாக்லேட்:

    சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை இதயத்திற்கும், சருமத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது. இந்த சாக்லேட்டில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை நோய்த்தொற்றுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் இதில் உள்ள பிளவோனால்கள், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடியவை.

     அவகேடோ:

    வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துகள் அவகேடோவில் நிரம்பி உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படக்கூடியது. குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் முதன்மை பணியை மேற்கொள்ளும்.

    அத்துடன் அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இதனை உட்கொள்வது சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றை தடுத்து சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும்.

     வால்நட்:

    இதில் சருமத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் கொழுப்புகள், வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம், புரதம் போன்ற சத்துகள் உள்ளடங்கி உள்ளன. அடிக்கடி பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வால்நட்டை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். மன அழுத்த அறிகுறிகளை கட்டுப்படுத்தி சரும நலனை பாதுகாக்கும்.

    • கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும்.
    • பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும். தினமும் வெளியே வெயிலில் சென்று திரும்பும் அனைவருக்கும் இது ஏற்றது. இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     பப்பாளி:

    உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா? இதற்கு பப்பாளி ஒன்றே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகாக பராமரிக்க முடியும்.

    பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவி செய்கிறது. இவ்வாறு செய்யும்போது இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

     காபி ஸ்க்ரப்:

    பால், தேன், தயிர், எலுமிச்சை, மஞ்சள் அல்லது கற்றாழை போன்ற பொருட்களுடன் காபி பவுடரை ஃபேஸ் பேக் வடிவில் பயன்படுத்தலாம். காபி தூளில் உள்ள காஃபின் நிறமிகளை ஒளிரச் செய்து, உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும். பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு காபித் தூளை பயன்படுத்தலாம்.

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி தூள் அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.

     தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர், அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

    தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி தூள் சேர்த்து ஸ்க்ரப் போல் செய்து கைகளில் தடவவும். நன்றாக காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

    இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை வெளியில் சென்று வீடு திரும்பும் போதும் இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளின் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.
    • சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

    ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் இனி அதை தூக்கி எறியாமல் வீட்டிலேயே சருமத்தை பாதுகாக்கக்கூடிய சூப்பரான குளியல் பொடி தயாரிக்கலாம்.

     இந்த ஆரஞ்சு பழத் தோலினை உலர்த்தி எடுத்துக்கொண்டு அதனுடன் நலங்குமாவு, கடலை மாவு, பயத்தம்பருப்பு மாவு, ஆவாரம்பூ பொடி, ரோஜா பொடி ஆகியவற்றுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போதும் அல்லது ஃபேஸ் வாஷ் செய்யும் போதும் பயன்படுத்திவரலாம். தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நல்ல ரிசல்ட் இருக்கும்.

     பயன்படுத்தும் முறைகள்:

    ஆரஞ்சு பழத் தோல் ஒரு ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு ஸ்பூன், பால் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் கிளியர் ஸ்கின் கிடைக்கும். கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

    ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிரை கலந்து சருமத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.

    ஆரஞ்சு தோல் மற்றும் சர்க்கரை, தேன் இவற்றை கலந்து முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம்

    பிரகாசமாக இருக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இம்முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆரஞ்சு தோலுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரால் கழிவினால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.

    வேப்ப இலை பேஸ்ட் , ஆரஞ்சு தோல் பவுடர், தேன், தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு வராமல்

    தடுக்கும் சருமம் பொலிவுடன் காணப்படும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    • தகுந்த ஷாம்பூவைக் கொண்டு வழக்கமாக முடியை அலச வேண்டும்.
    • அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துதல் வேண்டும்.

    * முடி உதிர்வைத் தடுக்க சரியான முடி பராமரிப்பு வழக்கத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. தகுந்த ஷாம்பூவைக் கொண்டு வழக்கமாக முடியை அலச வேண்டும். உங்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க கண்டிஷனிங் செய்தல் மற்றும் ஈரமான முடியை மெதுவாக அகற்றுவதற்கு அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் தலைமுடியை எப்போதும் காற்றில் உலர்த்த வேண்டும். கூடுதலாக, முடி கட்டுவதைக் குறைக்க முயற்சிக்கவும், நீங்கள் அதை கட்டும்போது, மென்மையான, துணியால் செய்யப்பட்ட ஹேர் பேண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

    * தலைக்கு குளிக்கும் போது தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும். எண்ணெய் இல்லாத தலையை தண்ணீர் ஊற்றி ஷாம்பு போட்டு தலை கசக்கினால் கட்டாயமாக முடி உதிர்வு அதிகமாகும்.

    * தினமும் தலைக்கு குளிப்பது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கலாம். தினமும் தலைக்கு குளித்தால் முடி உதிர்வது அதிகரிக்கத்தான் செய்யும்.

    * ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் போன்ற ரசாயனங்கள் நிறைந்த முடி தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படலாம். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மென்மையாக இருக்கும் லேசான, சல்பேட் இல்லாத பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

     * நிறைய பேர் தினமும் தலை சீவினால் முடி உதிர்கிறது என்று ஒரு கொண்டையை கட்டி வைத்துக் கொள்வார்கள். 2 நாட்கள் தலை சீவாமல் இருந்து, மூன்றாவது நாள் தலையை சீவும் போது அதிலிருக்கும் சிக்கு இன்னும் அதிகப்படியான முடி உதிர்வை உண்டாகும். தலை சீவுவது என்பது நம்முடைய மண்டை ஓட்டில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைக்கு மசாஜ் கொடுக்கும்.

    * வெயில் காலம் வரப்போகிறது. தலை அடிக்கடி அழுக்காகத் தொடங்கும். அதிகமாக தலையில் தூசு பட்டு, வியர்வை படிந்தால் முடி உதிர்வு அதிகமாகும். வெளியே செல்லும் போது உங்களுடைய தலையில் ஒரு காட்டன் துணியை கட்டிக்கொண்டு அதன் பின்பு வெளியே சென்றால் நல்லது. தினமும் பஸ்சில் டிராவல் செய்பவர்கள் கூட தலையில் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்வது நல்லது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் முடி உதிர்வு குறையும்.

    • ஆண், பெண் இருபலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.
    • தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது.

    பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம். இந்த பொடுகு பிரச்சனை என்பது எளிதில் தீர்க்க முடியாது. மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை விடாமல் சில நாட்கள் பயன்படுத்தினால் மட்டுமே சரியாகும்.

    தேவையான பொருள்கள்:

    மருதாணி இலை – 1 கப்

    எலுமிச்சை பழம் – 1

    தயிர் – 2 ஸ்பூன்

    முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நன்றாகப் பிழிந்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுத்தமான தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருதாணி இலையை அரைத்து நான்கு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.

    இந்த பேக்கை முதலில் தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், அமிலம் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்காத ஷாம்பு அல்லது சீயக்காய் மற்றும் அரப்பு போன்றவை கூட பயன்படுத்தலாம்.

    இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தினால் விரைவில் பொடுகுகள் முழுவதுமாக போகும் எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது.

    எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் அமிலம் உள்ளதால் அது கிருமிநாசினியான பண்புகள் கொண்டது அது தலையில் நோய்த் தொற்றுகள் இருந்தால் குணமாக்கும். பொடுகு பிரச்சனையைச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். தலையில் பித்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரிசெய்யும்.

    தயிரை தலைமுடியில் தேய்ப்பதால் தலையில் உள்ள முடிகளில் பொலிவு இல்லாமல் மற்றும் முடி அடர்த்தி குறைவாக இருந்தாலும் இது குணமாக்கித் தரும். தலைமுடி மிகவும் கருமையாகவும் மற்றும் பெலிவுடனும் வைத்து கொள்ளும்.

    மருதாணி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மருத்துவம் குணம் கொண்டது. இதை தலைக்குப் பயன்படுத்தினால் தலையில் உள்ள சூட்டை முழுவதுமாக நீக்கி குளிர்ச்சியாக வைத்திருக்கும். பித்தம் போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும்.

    இந்த மூன்றையும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான ஹேர் பேக் தயார் செய்து பயன்படுத்தினால் பொடுகு மற்றும் தலையில் முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

    • தற்போது பலபெண்கள் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அழகாகத்தெரிவது பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும்.

    இன்று நடிகைகளுக்கு இணையாக பல பெண்களும் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் அழகை மெருகேற்றுவதில் தணியாத விருப்பம் கொண்டுள்ளனர். குடும்ப நிகழ்வானாலும் சரி, பொது நிகழ்வானாலும் சரி, தேவதை போல தோன்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாம் அழகாக காட்சியளிக்கிறோம் என்ற உணர்வு, பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும். எனவே ஒப்பனை நாட்டத்தில் தவறில்லை.

     ஆனால் பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கண்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரவங்கள். சஸ்பென்சன்ஸ், பைன் பவுடர், கிளிட்டர் போன்ற கண் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. இவற்றை தவறான முறையில் பயன்படுத்தினால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். உதாரணத்துக்கு, ஐ லைனர், காஜல் போன்றவற்றை தவறாக பயன்படுத்துகையில் கண் இமை சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படலாம்.

     கண் இமை அழற்சிக்கும் வழிவகுக்கக்கூடும். மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றை பயன்படுத்தும் போது விழி வெண்படல சிராய்ப்பு, விழிப்பாவை, கண் நிறமி பாதிப்பு போன்றவை நேரலாம். கண் தொற்று நோய்கள் உண்டாகக்கூடும். 'ஐ லாஷ்' எனப்படும் செயற்கை கண்ணிமை முடிகள், வேதிப் பசைகளை பயன்படுத்தி இமையுடன் இணைக்கப்படுவதால் சருமத்துக்கு எரிச்சலை தரக்கூடும். ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடும்.

     தற்போது சில பெண்கள் 'கான்டாக்ட் லென்சு'களையும் அழகுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இது தூய்மையாக இல்லாவிட்டால், கண் தொற்று போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'கான்டாக்ட் லென்சை மாற்றி பயன்படுத்த வேண்டும். தினமும் அதற்கான கரைசலை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும். கான்டாக்ட் லென்சுடன் தூங்கக்கூடாது. ஒப்பனையை கலைக்கும் முன் லென்சை அகற்றிவிட வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

    • சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.
    • குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

    குங்குமப்பூ எண்ணெய் மசாஜ்

    குங்குமப்பூ எண்ணெய்யுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் சேர்த்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.

     குங்குமப்பூ பேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் சிறிதளவு குங்குமப்பூ இழைகளை கலந்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். சருமத்துக்கு கூடுதல் பிரகாசம் அளிக்கும்.

    கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சூரிய கதிர்வீச்சுகளின் வீரியம் அதிகமாக இருக்கும் வேளையில் வெளியே நடமாடினால் சருமம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும். அதனை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க விரும்புபவர்களின் தேர்வாக குங்குமப்பூ அமைந்திருக்கிறது. அது வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது. வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * குங்குமப்பூவில் குரோசின், குரோசெடின், சப்ரானால் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் மற்றும் சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.

    * குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    * குங்குமப்பூவில் வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை சரும வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை. இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் துணை புரியும்.

    * குங்குமப்பூவில் உள்ள இயற்கையான கரோட்டினாய்டுகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை.

     சரும பராமரிப்புக்கு ஏற்ற குறிப்புகள்:

    நீரேற்றத்துடன் இருங்கள்:

    சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:

    தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

    சமச்சீர் உணவை உண்ணுங்கள்:

    பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகள், பெர்ரி வகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சருமத்தை சுத்தம் செய்யுங்கள்:

    சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தவறாமல் சுத்தப்படுத்துங்கள். வெளி இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் 'பேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவுங்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை சுத்தம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள். இறந்த செல்களை அகற்றவும், மென்மையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

    • சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள்.
    • கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும்.

    சாதம் வடித்த கஞ்சியைக் கூந்தலுக்கும், அரிசி களைந்த நீரை சருமத்துக்கும் பயன்படுத்துவது என்பது சமீபகாலமாக கொரியன் அழகு சிகிச்சைகளில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒன்று.

    சாதம் வடித்த கஞ்சியை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பயன்படுத்தும் பாரம்பரியம் அந்த காலத்தில் இருந்தே உண்டு. சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள். இந்த கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும். பெப்டைட்சின் பலன்களை உறுதிசெய்ய நிறைய ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

    பெப்டைட்ஸ் என்பவை அமினோ அமிலங்கள் தான். அதாவது, ஒருவகை புரதம். இதை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போதும் சரி, உள்ளுக்கு உட்கொள்ளும்போதும் சரி, மிக மிக நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது சருமத்தின் இளமைக்கும் எலாஸ்டிக் தன்மைக்கும் காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். ஆக்சிஜனேற்ற அழுத்தம்' எனப்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

     வெயிலின் தாக்கத்தால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பையும். டி.என்.ஏ பாதிப்பையும் தடுக்கும் தன்மை பெப்டைட்சுக்கு உண்டு என்பதை உறுதிசெய்யும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், சாதம் வடித்த கஞ்சியில் பெப்டைட்ஸ் ஓரளவு உள்ளது உண்மைதான்.

    அதனால் இந்த தண்ணீர் அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது சரியானதுதான். ஆனால், இது மட்டுமே பெப்டைட்ஸ் தேவைக்குப் போதுமானதா என்றால் நிச்சயம் போதாது.

    நம் சருமத்துக்குள்ளும் கூந்தலுக்குள்ளும் ஊடுருவும்படியான வடிவில் பெப்டைட்ஸ் உள்ள பொருட்களை உபயோகிப்பதுதான் சரியானது. வெளிப்பூச்சைவிடவும் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும்போது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். முகத்தைக் கழுவவும் கூந்தலை அலசவும் இந்த தண்ணீரை தாராளமாக உபயோகிக்கலாம். அதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.

    • சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
    • சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

     மஞ்சள் சாமந்திப்பூ:

    சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

     சீமை சாமந்திப்பூ:

    சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

     பப்பாளி:

    பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

     கற்றாழை:

    சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

     வாழைப்பழம் மற்றும் தேன்:

    வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

     பார்லி:

    பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

     சந்தனம்:

    சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

     மூலிகைத் தேநீர்:

    சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

    • நக ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பயோட்டின் நக வளர்ச்சிக்கு உதவுகிறது.

    ஆரோக்கியமான நகங்கள் உங்கள் கைகளின் தோற்றத்தை அழகாக்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் குறிக்கிறது. இருப்பினும், அடிக்கடி நகங்கள் உடைவது உங்களை வெறுப்பாக்கலாம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது முறையற்ற நக பராமரிப்பு பழக்கம் போன்ற அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். நகங்கள் அடிக்கடி உடைவதைத் தடுக்கவும், வலிமையான, ஆரோக்கியமான நகங்களை மேம்படுத்தவும் உதவும் சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    சீரான டயட்

    நக ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் புரதம், பயோட்டின், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.

    மெலிந்த இறைச்சிகள், மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் நகங்களின் வலிமையை ஆதரிக்கின்றன, அதேநேரத்தில் பயோட்டின் நக வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த நக ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்க ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்

    நீரேற்றமாக இருக்க வேண்டும்

    நகங்களின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும், உடையக்கூடிய தன்மையைத் தடுக்கவும் சரியான நீரேற்றம் அவசியம். உங்கள் நகங்களை உள்ளே இருந்து நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். கூடுதலாக, மாய்ஸ்சரைசிங் ஹேண்ட் க்ரீம் அல்லது க்யூட்டிகல் ஆயிலை தவறாமல் தடவுவது, நகங்கள் மற்றும் சுற்றியுள்ள தோலை ஹைட்ரேட் செய்து, உடையும் அபாயத்தைக் குறைக்கும்.

     மென்மையான நக பராமரிப்பு பயிற்சி

    கடுமையான ரசாயனங்கள், அதிகப்படியான ஃபைலிங் அல்லது உங்கள் நகங்களை கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்த நடைமுறைகள் நகங்களை வலுவிழக்கச் செய்து உடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நகங்களை ஒரு திசையில் வடிவமைக்க மென்மையான நக வெட்டிகளைப் பயன்படுத்தவும், முன்னும் பின்னுமாக வெட்டுவதைத் தவிர்க்கவும், இது பிளவு மற்றும் உடைவதற்கு வழிவகுக்கும். நகங்கள் அதிக நீளமாகவும், உடைந்து போகாமல் இருக்கவும் அவற்றைத் தொடர்ந்து ஒழுங்கமைக்கவும்

    சரியான நக சுகாதாரத்தை பராமரிக்கவும்

    பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க உங்கள் நகங்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருங்கள், இது நகங்களை வலுவிழக்கச் செய்து உடைப்பை ஏற்படுத்தும். நகங்களுக்கு அடியில் சுத்தம் செய்யவும், அழுக்கு அல்லது குப்பைகளை அகற்றவும் மென்மையான தூரிகையைப் பயன்படுத்தவும். நகங்களை ஆக்ரோஷமாக வெட்டுவதையோ அல்லது பின்னுக்கு இழுப்பதையோ தவிர்க்கவும், இது நக அமைப்பை சேதப்படுத்தும் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

    • சன்ஸ்கிரீன் நம் சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும்.
    • புறஊதாக்கதிர் உங்கள் சருமத்தில் படாமல் ஒரு கவசம் போல பயன்படும்.

    சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிரில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பயன்படுத்தும் கிரீமாகும். இது நம் சருமத்தை வெயிலில் இருந்தும் சரும புற்றுநோயில் இருந்தும் பாதுகாக்கும்.

    சன்ஸ்கிரீன்கள் ஜெல், லோஷன், கிரீம் போன்றவற்றில் கிடைக்கிறது. சன் ஸ்கிரீன் போடாததால் நம் சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, பிக்மென்டேஷன் போன்றவை வரக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் நம் சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும்.

    சன்ஸ்கிரீன் இரண்டு வகைப்படும். ஒன்று பிசிக்கல் பிளாக்கர்ஸ், இரண்டாவது கெமிக்கல் அப்சார்ப்பர்ஸ். பிசிக்கல் பிளாக்கர்ஸ் என்றால், நீங்கள் இந்த வகை சன்ஸ்கிரீனை தடவும்போது அதில் பயன்படுத்தியிருக்கும் டைட்டானியம் டை ஆக்ஸைடு அல்லது ஸிங் ஆக்ஸைடு போன்றவை புறஊதாக்கதிர் உங்கள் சருமத்தில் படாமல் ஒரு கவசம் போல பயன்படும்.

     இதுவே கெமிக்கல் அப்சாப்பர்ஸ் என்றால், புறஊதாக்கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவுவதற்கு முன் இவை அதை உறிஞ்சிக்கொள்ளும். புறஊதாக்கதிர் நம் சருமத்தில் படுவதால், சருமம் வயதாவதற்கும், சரும புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதை தடுக்க வேண்டுமானால் சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம், SPF (சன் புரோட்டக்ஷன் பேக்டர்).

    சன் புரொட்டக்ஷன் ப்பேக்டர் என்றால், இது எவ்வளவு நேரம் நம் சருமத்தை வெயிலில் இருந்து காக்கும் என்பதாகும். SPF 50 யை வாங்குவதே சிறந்ததாகும். ஏனெனில் இது 98 சதவீத சூரிய ஒளியை தடுக்கிறது. எனினும் SPF 30 பயன்படுத்தலாம் என்று சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது 96.7 சதவீதம் சூரிய ஒளியை தடுக்கும்.

    பிஏ என்பது சூரிய ஒளியை தடுக்கும் திறன் கொண்டதை குறிக்கிறது. பிளஸ் அதிகமாக ஆக அதன் திறனும் அதிகமாகும். பிஏ++++ அதிகமாக 95 சதவீதம் வரை புற ஊதாக்கதிரை தடுக்கும்.

    சன்ஸ்கீரினை முகத்திற்கு மட்டுமில்லாமல் வெயில் படக்கூடிய இடங்களான கை, கால்கள் என்று எல்லா இடங்களிலும் தடவ வேண்டும்.

    சன்ஸ்கிரீனை பெரும்பாலும் வாட்டர் ரெசிஸ்டன்டாக பார்த்து வாங்குவது நல்லது. வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லதாகும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை போட மறந்துவிடக்கூடாது.

     சன்ஸ்கிரீனின் பயன்கள்

    புறஊதா கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.

    சருமத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

    வெயிலை தடுக்கும், சருமத்தை வயதாகாமல் தடுக்கும்.

    மெலஸ்மாவை தடுக்கும்.

    சூரிய புள்ளிகளை தடுக்கும்.

    சருமைத்தை மேம்படுத்தும்.

    ஈரப்பதமாகவும், சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் போக்கவும் உதவுகிறது.

    சன்ஸ்கிரீனை இரண்டு விரல் நீளத்திற்கு எடுத்துக்கொண்டு முகம், காது, கழுத்து என்று தடவ வேண்டுமென கூறுகிறார்கள். இதுவே இரண்டு விரல் விதிமுறையாம். இது இளைய தலைமுறையினரிடம் பிரபலமடைந்தாலும், இதுபோன்றவையெல்லாம் உண்மை கிடையாது என்று கூறுகின்றனர். சன்ஸ்கிரீனை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருமே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தகக்கது.

    ×