search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம்.
    • அத்திப்பழ ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    பொதுவாக அத்திப்பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு கூறியுள்ளனர். இதோடு இந்த அத்தி பழத்தை பேஸ்ட்டாக அரைத்து, நம் முகத்தில் அப்ளை செய்து கொண்டால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம். அப்படிப்பட்ட இயற்கையான மருத்துவ குணமுள்ள இந்த அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    அத்திப்பழம் – 2

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிக்க அத்திப்பழத்தை தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதோடு 2 ஸ்பூன் தயிர் மற்றும் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி சுத்தமாக துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு நாம் அரைத்து வைத்துள்ள, ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழிவிக்கொள்ளலாம். அத்திபழத்தில் இருக்கும் சில சத்துக்கள் நம் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, அழகான முகம் கிடைக்க உதவியாக இருக்கும்.

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி தெரியுமா?
    • வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் வெற்றிலையில் உள்ளது.

    பல நேரங்களில் நம் முகம் சில சருமம் பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். இதனால் நம் முகத்தின் அழகு பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியமே இருக்காது. ஏனென்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வெற்றிலையை வைத்து ஒரு சூப்பரான வெற்றிலை ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை – 5

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 1 டீஸ்பூன்

    அரிசி மாவு – 1 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு 5 வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளவும்.

    அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். பின்னர் கற்றாழை ஜெல் இருந்தால் முகத்தில் அப்ளை செய்து, ஜென்டில் மசாஜ் கொடுத்தால் போதும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பருக்களால் பாதிக்கப்படும் போது, அப்ளை செய்து வந்தால் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

     சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள்

    வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் கட்டிகள் சருமத்தில் ஏற்படாமல் தடுக்கின்றன. பருவால் முகம் சிவப்பாக மாறும் பிரச்சனையையும் வெற்றிலை சரிசெய்கிறது.

    ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த வெற்றிலை, வயதான தோற்றத்தை தரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

    வெயிலில் சென்றால் திடீரென்று சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை சரிசெய்ய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்திற்கு ஃபிரஷ் லுக்கை தருகிறது.

    • இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது.
    • இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக்.

    முதுமைக்கு நரை அழகுதான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது. தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்றைக்கு நாம் இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். இது உங்கள் முடிக்கு உறுதி தந்து, முடி உதிர்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

     தேவையான பொருட்கள்:

    ஆளி விதை – 100 கிராம்

    கற்றாழை – 3 டீஸ்பூன்

    விட்டமின் இ கேப்ஸ்யூல் – 3

    செய்முறை:

    ஆளி விதை ஹேர் பேக் செய்வதற்கு 100 கிராம் ஆளி விதையை எடுத்து அத்துடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நாம் கொதிக்க வைத்துள்ள ஆளி விதை தண்ணீர் ஒரு ஜெல் பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி எடுத்துள்ள ஆளிவ் ஜெல்லுடன் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பிறகு இதோடு இ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது ஆளிவ் ஹேர் பேக் ரெடி. முடியில் தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விட வேண்டும்.

    இந்த ஆளிவ் ஹேர் பேக்கில் ஒமேகா 3 என்ற ஒரு வகையான சத்து இருப்பதால், இது நம் முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது. இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.

    • எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
    • மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.

    லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த காரணத்துக்கேற்ற லிப்பாம் வாங்கி பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.

    சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம்.

     இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அலர்ஜி உள்ளவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் மாய்ஸ்ச்சரைசர் மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

    சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார். இப்படி எந்த தேவையும் இல்லை... வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதில் வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

    • கெமோமில் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராகும்.
    • அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம். சரும வறட்சியை சரிசெய்ய சில டிப்ஸ்கள்.

    * சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    * தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.

    * தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம்.

     கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

    * வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

     * ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    * தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

    எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.

    கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். முகம் பொலிவாக இருப்பதற்கும் இது உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.

    சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

    • சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
    • சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

    கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

     

    1. சரும பராமரிப்பு:

    கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலக்காதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம்தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

     2. சன்ஸ்கிரீன் பயன்பாடு:

    சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமான நாட்களில் கூட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நேராமல் தற்காத்துக்கொள்ள அவை உதவுகின்றன.

    3. புளிப்பு வகை உணவு:

    கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உட்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கும் வித்திடும் புரோபயாட்டிக்குகள் நிறைந்தவை.

    4. நீர் அருந்துதல்:

    உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    5. தூக்கம்:

    ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்திற்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

    கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.

    7. மன அழுத்தம்:

    மன அழுத்தமும் முகப்பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.

    8. உணவு வழக்கம்:

    கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பேணவும் வழிவகுக்கிறது.

    • அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.
    • ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது.

    பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் காஜல், மஸ்காரா, பவுண்டேஷன், ஐ லைனர், லிப் லைனர், ரோஸ் என பல பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. அந்தவகையில், மேக்கப் போட விரும்பாத பெண்களாக இருந்தால் அழகுகுறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

     தண்ணீர் குடித்தல்

    உடலில் நீர்ச்சத்து குறையும் போது சருமம் வறண்டு விடக்கூடும் என அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

     புருவங்களைத் திருத்துதல்

    பெண்களின் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் புருவ அழகுதான். அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களைத் திருத்திக் கொள்ளலாம். மேலும், கண்மைகளை பயன்படுத்தி புருவத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

     சரும பராமரிப்பு

    சருமத்தில் எவ்வித பிரச்சனைகள், அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்க, முகத்திற்கு எண்ணெய் மற்றும் சீரம் பயன்படுத்தவும். மேலும், ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அதிகளவு உண்ணவேண்டும்.

     ஹேர் ஸ்டைல்

    மேக்கப் விரும்பாத பெண்கள், சிகை அலங்காரத்திலும் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆடைகளுக்கு ஏற்ற விதவிதமான ஜடைகள், பூக்கள் போன்றவற்றை வைத்து அழகாக்கிக்கொள்ள முடியும்.

     உதடு பராமரிப்பு

    உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்ல லிப் பாம் மட்டும் உபயோகிக்கலாம்.

     உடைகளில் கவனம்

    உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை அணிவது உங்களை அழகாக காட்டும்.

    இயற்கை அழகுசாதனப் பொருள்கள்

    முகத்திற்கு மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற இயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.

     மகிழ்ச்சியாக இருத்தல்

    ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே முகம் அழகாக தெரியும்.

     தூக்கம்

    சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் கண்களை சுற்றி கருவளையம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது தூக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    • முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது.
    • எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது.

    சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத தவறுகள் நிறைய இருக்கின்றது. அதில் சில தவறுகள் இங்கே உங்களுக்காக...

    * வெந்நீரில் குளிப்பது நல்லது தான் ஆனாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது கூந்தலில் உள்ள வேர்களை பாதிப்பதோடு, பலவீனமாக்கும்.

    * மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால் ஏற்படக்கூடும். அது அழகு பிரச்சினை இல்ல, ஆரோக்கியப் பிரச்சினை என்று புரிந்துகொண்டு டாக்டரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    * உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு இயற்கையாகவே அழகு கிடைக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதில் எல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்கு கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாகத்தான் கையாள வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினால் போதுமானது.

    * எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படி செய்தால் பரு போகாது. அதனுள் இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்புகளை அதிகமாக்கவே செய்யும்.

    * உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினால் சருமத்துக்கு பல மடங்கு வேகமாக வயசான தோற்றத்தை அளிக்கும் என்று கூறுகிறார்கள் சரும நிபுணர்கள்.

    * ரசாயனங்களால் ஆன பிளீச்... அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

    * சில யூடியூப் வீடியோக்களில `ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா'னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமாக உலரச் செய்யும். எனவே முகத்தில் பருக்கள், அரிப்பு, வீக்கம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

    * தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் முடியின்வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால் அதை தவிர்ப்பதே நல்லது.

    இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு... ஒரு விஷயத்தைப் செய்தால் கிடைத்துவிடும். அது தான், சத்தான உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணி குடிக்க வேண்டும். அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்...!

    • பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்
    • தலைக்கு குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொடுகில் வெளியே வெள்ளை நிறத்தில் உதிரும் வகை மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    நாட்டு மருந்து கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள். டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

     பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

    30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களை தடவிய 20 நிமிடங்களில் தலையில் இறங்கும், மேலும் நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை. பிறகு தலைமுடியை நன்கு வாரிவிடவும். இந்த கலவையை சூடுபடுத்தக் கூடாது.

     பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது) கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய தலையில் இந்த கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவ வேண்டும். பிறகு, பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்த கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை. தலைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.

    45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.

    • முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    • வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.

    முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்

    2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

    3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

    4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,

    5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

    6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

    7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.

    8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

    9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

    10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

    11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.

    12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

     ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.

    தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

    அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    ×