என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தோசைக்கு சத்தான கீரை சட்னி
Byமாலை மலர்11 Oct 2017 5:30 AM GMT (Updated: 11 Oct 2017 5:30 AM GMT)
கீரையை பொரியல், கூட்டு செய்து சலித்து போனவர்கள் இப்படி கீரையில் சட்னி செய்யலாம். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட இந்த கீரை சட்னி சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
புதினா - ஒரு கைப்பிடி அளவு,
பாலக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
சாம்பார் வெங்காயம் - 5,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
புதினா, பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
எல்லாம் நன்றாக ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் போட்ட அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புதினா - ஒரு கைப்பிடி அளவு,
பாலக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
சாம்பார் வெங்காயம் - 5,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
புதினா, பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
எல்லாம் நன்றாக ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் போட்ட அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X