என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்
Byமாலை மலர்21 Jun 2017 6:07 AM GMT (Updated: 21 Jun 2017 6:08 AM GMT)
பெண்கள் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. இப்போது நகத்தின் வலிமையை பாதுகாக்கும் வழியை பார்க்கலாம்.
பெண்கள் விரல் நகங்களை நெயில் பாலீஷ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. சிலருக்கு நகங்கள் பலகீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும்.
பெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.
உப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.
நகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.
பெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.
உப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.
நகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X