என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்
Byமாலை மலர்25 Feb 2017 8:23 AM GMT (Updated: 25 Feb 2017 8:23 AM GMT)
அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்க இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.
கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும். இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சந்தனப் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்.
பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள க்ரீம்மை முகத்தில் தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
தேவையான பொருட்கள்:
ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சந்தனப் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்.
பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள க்ரீம்மை முகத்தில் தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X