search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • மூலிகை குளியல் பொடி உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
    • மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும்.

    இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும். மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் மூலிகைகளால் செய்யப்பட்ட `மூலிகை குளியல் பொடி' உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.

     சரும பிரச்சனைகள்:

    நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் யாருக்கும் தன்னுடைய உடல் நலனை பற்றியும் உடல் அழகு பற்றியும் சிறிது கூட கவலை கிடையாது. குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை சருமப்பிரச்சனை. சரும தொந்தரவுகள், சரும வறட்சி என்று பல பிரச்சனைகள் எழுகிறது. இதற்கு காரணம் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்கை சாதனங்கள் தான். அதனை தவிர்த்து நம் முன்னோர்கள் அளித்துள்ள இயற்கையான மூலிகைகளை கொண்டு ஒரு அருமையான `மூலிகை குளியல் பொடி' தயார் செய்து பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    கஸ்தூரி மஞ்சள் -100 கிராம்

    விரலி மஞ்சள் – 100 கிராம்

    சந்தானம் – 100 கிராம்

    கோரைக்கிழங்கு பொடி -100 கிராம்

    பாசிப்பயிறு -100 கிராம்

    இவை அனைத்தையும் ஒரு நாள் நிழலில் காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தினம் சோப்பு மற்றும் லோஷன் பயன்படுத்துவதற்கு பதில் இந்த மூலிகை பொடியை பயன்படுத்தலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியாகவும், நறுமணம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

    பயன்கள்:

    இதன் மூலமாக சொறி, சிரங்கு, தேமல் போன்ற பல சருமப் பிரச்சனைகளில் இருந்து மீளலாம். இந்த பொடி எந்த ஒரு அலர்ஜியையும் ஏற்படுத்தாது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் கூட இதனை பயன்படுத்தலாம்.

     மற்றொரு மூலிகை பொடி

    மூலிகை குளியல் பொடி தயாரிக்க சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

    இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.

    தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும். அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.

    தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும், வரிகளும் மறைந்து போகும். வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உண்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.

    • பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும்.
    • கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    முகத்தில் இயற்கையான பளபளப்பு தோன்றும் வகையில் அழகுபடுத்த பெண்கள் பல வகையான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் சருமம் உள்ளிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே இயற்கையான பளபளப்பை பெற நீங்கள் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பாதவர் யார்? பெண்கள் அழகாக இருக்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். மேலும் பல கிரீம்களை தங்கள் முகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையான பளபளப்பைக் காண விரும்பினால், சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக மாற்றுவது தான்முக்கியம்.

    இதற்காக, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை கடைப்பிடித்தால், படிப்படியாக தோல் பிரச்சினைகள் மறைந்துவிடும், மேலும் சில அழகுசாதனப் பொருட்களில் இருந்தும் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

    அன்றாட வழக்கத்தின் நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை நோய்களில் இருந்து விலக்குவது மட்டுமல்ல. இதனுடன், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே எந்தெந்த நல்ல பழக்கங்கள் உங்கள் முகத்தில் பொலிவைத் தரும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

    நாம் விழா அல்லது வெளியில் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேவையவற்றை உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 10 நாட்கள் அல்லது 1 வாரத்திற்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ருட் போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். ஜங்க்புட் தவிர்த்துவிட வேண்டும்.

    தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கைகால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இரவில் தூங்கும்போது தேங்காய் எண்ணெய், கற்றாழை, வைட்டமின் E மாத்திரை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து தூங்கி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    அதன்பிறகு பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும். இதை விட முக்கியமான ஒன்று தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன் மாசு மருக்கள் தவிர்க்கலாம்.

    காலை உணவு முதல் இரவு உணவு வரை சரியான நடைமுறையைப் பின்பற்ற முடியும், மேலும் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக மாறும். கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டிடாக்ஸாக வேலை செய்கிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் பச்சை மற்றும் பருவகால காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து, சீரான உணவைப் பின்பற்றுங்கள்.

    ரோஸ் வாட்டர் சிறந்த இயற்கை மூலப்பொருளாகும், இது சருமத்தை அழகாக்க பயன்படுகிறது. தினமும் இதை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

    • கண் தான் முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை.
    • கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும்.

    கண்கள் தான் ஒருவரது முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை. மிகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் அமைந்திருக்கும் கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு ஊறுவிளைவிக்கத்தக்க செயற்கை ஒளியை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது. கணிப்பொறியில் பணி செய்வதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதுவுமே நம் கண்களைப் பெரிதும் சோர்வடையச் செய்கின்றன.

    நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கு ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

     மசாஜ்:

    ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதன்பின் வேப்ப எண்ணெயை 3 முதல் 4 துளி வரை கலந்து கொள்ளலாம். இதனை கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். இவ்வாறு செய்வதினால் கண்களில் உள்ள சுருக்கம் நீங்க ஆரமிக்கும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.

    மற்றொரு முறைப்படி ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 ஸ்பூன், அவோகேடா எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து தூங்கச் செல்லும்போது இதனை நன்றாக தடவி விட்டு படுக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண் சுருக்கம், கண் சோர்வு ஆகியவை நீங்கும்.

     கண்களுக்கான பயிற்சி

    ஒரு பென்சில் அல்லது பேனாவை வலது கையினால் எழுதுமுனை மேல் நோக்கியவாறு கைக்கெட்டிய தூரத்தில் பிடியுங்கள். மெல்ல மெல்ல அதைக் கண்களுக்கு அருகே எழுதுமுனை இரண்டாகத் தெரியும் வரை கொண்டு வாருங்கள் அந்த அளவில் நிறுத்திச் சிறிது நேரம் பென்சிலின் முனையை உற்று நோக்குங்கள். பின்னர் பென்சிலை கண்களுக்கு அருகில் இருந்து அகற்றிப் பழைய நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இதுபோல் நான்கைந்து முறை செய்யுங்கள்.

    கண்சோர்வை நீக்க மற்றுமொரு பயிற்சி. ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்து கொண்டு முழங்கைகள் இரண்டையும் மேஜையில் ஊன்றிக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் இறுகப் பொத்திக்கொள்ளுங்கள். தலையைத் தொய்வாக வைத்து இரண்டு கைகளாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இதேபோல் பத்து நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களில் இருந்து கைகளை விலக்குங்கள். இதுபோல் தினமும் பல முறை செய்யலாம்.

    • பெண்கள் அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
    • கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும்.

    பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

     கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

    கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

    தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி கசக்குவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவைகளே முக்கியமான காரணங்கள். இதனை எளிமையாக வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே நீக்கி விடலாம்.

     கருவளையத்தை நீக்க சில டிப்ஸ்:

    * முதலில் ஒரு ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டு அதனை மென்மையாக கண்களில் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    * கிரீன் டீ பேக் இருந்தால் அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து கண்களுக்கு மேலே 10 நிமிடங்கள் வைக்கலாம்.

    * புதினா அழகை பராமரிக்க உதவும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் புதினா இலைகளை அரைத்து அந்த சாறை கருவளையத்தின் மீது 10 நிமிடம் வைக்கலாம்.

    * காய்ச்சாத பால் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன், பன்னீர் 2 டீஸ்பூன் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டன் பஞ்சை வைத்து ஊற வைக்கவும். பின்னர் அந்த பஞ்சுகளை 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைத்தால் போதும்.

    * ஒரு தக்காளியை பிழிந்து நன்கு சாறு எடுத்து கொள்ளுங்கள், அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருவளையத்தில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து காய்ந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

    • வெயில் காலத்தில் கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும்.
    • பப்பாளி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுப்பதில்லை. கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     எலுமிச்சை ஸ்க்ரப்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதனை கைகளில் தடவி, சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எனவே கைகளில் இருக்கும் கருமை நிறம் மாறி கைகள் பளிச்சென்று இருக்கும்.

      பப்பாளி ஸ்க்ரப்:

    கைகளில் உள்ள கருமை நீங்க பப்பாளி அதிக அளவில் உதவும். இந்த பேக் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் பப்பாளி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

     காபி ஸ்க்ரப்:

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி, தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஸ்க்ரப்பை கைகளை தடவி சிறிது நேரம் கழித்து நன்றாக மசாஜ் செய்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும்.

    தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளில் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம்.
    • அத்திப்பழ ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    பொதுவாக அத்திப்பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு கூறியுள்ளனர். இதோடு இந்த அத்தி பழத்தை பேஸ்ட்டாக அரைத்து, நம் முகத்தில் அப்ளை செய்து கொண்டால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம். அப்படிப்பட்ட இயற்கையான மருத்துவ குணமுள்ள இந்த அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    அத்திப்பழம் – 2

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிக்க அத்திப்பழத்தை தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதோடு 2 ஸ்பூன் தயிர் மற்றும் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி சுத்தமாக துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு நாம் அரைத்து வைத்துள்ள, ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழிவிக்கொள்ளலாம். அத்திபழத்தில் இருக்கும் சில சத்துக்கள் நம் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, அழகான முகம் கிடைக்க உதவியாக இருக்கும்.

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி தெரியுமா?
    • வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் வெற்றிலையில் உள்ளது.

    பல நேரங்களில் நம் முகம் சில சருமம் பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். இதனால் நம் முகத்தின் அழகு பாதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியமே இருக்காது. ஏனென்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வெற்றிலையை வைத்து ஒரு சூப்பரான வெற்றிலை ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    வெற்றிலை – 5

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 1 டீஸ்பூன்

    அரிசி மாவு – 1 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு 5 வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளவும்.

    அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். பின்னர் கற்றாழை ஜெல் இருந்தால் முகத்தில் அப்ளை செய்து, ஜென்டில் மசாஜ் கொடுத்தால் போதும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பருக்களால் பாதிக்கப்படும் போது, அப்ளை செய்து வந்தால் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

     சருமத்திற்கு வெற்றிலை தரும் நன்மைகள்

    வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் கட்டிகள் சருமத்தில் ஏற்படாமல் தடுக்கின்றன. பருவால் முகம் சிவப்பாக மாறும் பிரச்சனையையும் வெற்றிலை சரிசெய்கிறது.

    ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த வெற்றிலை, வயதான தோற்றத்தை தரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.

    வெற்றிலையில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

    வெயிலில் சென்றால் திடீரென்று சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை சரிசெய்ய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்திற்கு ஃபிரஷ் லுக்கை தருகிறது.

    • இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது.
    • இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக்.

    முதுமைக்கு நரை அழகுதான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது. தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்றைக்கு நாம் இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். இது உங்கள் முடிக்கு உறுதி தந்து, முடி உதிர்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

     தேவையான பொருட்கள்:

    ஆளி விதை – 100 கிராம்

    கற்றாழை – 3 டீஸ்பூன்

    விட்டமின் இ கேப்ஸ்யூல் – 3

    செய்முறை:

    ஆளி விதை ஹேர் பேக் செய்வதற்கு 100 கிராம் ஆளி விதையை எடுத்து அத்துடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நாம் கொதிக்க வைத்துள்ள ஆளி விதை தண்ணீர் ஒரு ஜெல் பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி எடுத்துள்ள ஆளிவ் ஜெல்லுடன் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பிறகு இதோடு இ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது ஆளிவ் ஹேர் பேக் ரெடி. முடியில் தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விட வேண்டும்.

    இந்த ஆளிவ் ஹேர் பேக்கில் ஒமேகா 3 என்ற ஒரு வகையான சத்து இருப்பதால், இது நம் முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது. இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.

    • எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
    • மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.

    லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எந்த காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த காரணத்துக்கேற்ற லிப்பாம் வாங்கி பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.

    சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம்.

     இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அலர்ஜி உள்ளவர்களுக்கும் இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் மாய்ஸ்ச்சரைசர் மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

    சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார். இப்படி எந்த தேவையும் இல்லை... வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், மாய்ஸ்ச்சரைசர் உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதில் வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

    • கெமோமில் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராகும்.
    • அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம். சரும வறட்சியை சரிசெய்ய சில டிப்ஸ்கள்.

    * சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    * தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.

    * தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம்.

     கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

    * வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

     * ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    * தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

    எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.

    கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். முகம் பொலிவாக இருப்பதற்கும் இது உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.

    சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

    ×