search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா
    X

    சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா

    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த கீரை பக்கோடா. இந்த பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு
    கடலை மாவு - 2 கப்
    அரிசி மாவு - 4 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - சிறு துண்டு
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு நன்றாக கலக்கவும்.

    இத்துடன் கீரையை சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும். 

    வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் எடுத்து பக்கோடா மாவில் விட்டு பிசிறி கொள்ளவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும். 

    கீரை பக்கோடா ரெடி.

    சாப்பிட மிகவும் சுவையான சத்தான ஸ்நாக்ஸ் இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×