search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் புட்டிங்
    X

    வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் புட்டிங்

    குழந்தைகளுக்கு சாக்லேட் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இதற்காக ஹோட்டலுக்கு போன வேண்டியதில்லை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பால் - இரண்டரை கப்,
    ஃப்ரெஷ் கிரீம் - முக்கால் கப்,
    சோள மாவு - கால் கப்,
    சர்க்கரை - 1/3 கப்,
    கோகோ பவுடர் - கால் கப்,
    சாக்லேட் சிப்ஸ் - 1/3 கப்,
    வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,

    அலங்கரிக்க :

    புதினா இலை - சிறிதளவு,
    செர்ரி பழம் - தேவையான அளவு,
    கோகோ பவுடர் - சிறிதளவு.



    செய்முறை :

    செர்ரி பழத்தை மெல்லிய வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், கிரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலந்த கலவையை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

    இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.

    இந்த கலவை நன்றாக ஆறியவுடன் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    புட்டிங் நன்றாக செட் ஆனவுடன் அதன் மேலே கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×