என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா
Byமாலை மலர்20 Nov 2017 7:32 AM GMT (Updated: 20 Nov 2017 7:32 AM GMT)
பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ். இன்று இந்த பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபிகார்ன் - அரை கிலோ,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெரிய தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பாட்டி மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
பாட்டி கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப,
பாட்டி தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
பாட்டி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 5 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் ‘கட்’ செய்யவும்.
ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு பாட்டி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பாட்டி கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, பாட்டி மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தனியே வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து பாட்டி மிளகாய்த்தூள், பாட்டி தனியாத்தூள், பாட்டி மஞ்சள்தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேபிகார்ன் - அரை கிலோ,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெரிய தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பாட்டி மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
பாட்டி கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப,
பாட்டி தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
பாட்டி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 5 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் ‘கட்’ செய்யவும்.
ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு பாட்டி மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பாட்டி கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, பாட்டி மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தனியே வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து பாட்டி மிளகாய்த்தூள், பாட்டி தனியாத்தூள், பாட்டி மஞ்சள்தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி… இறக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X