என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான ஆலுமட்டர் புலாவ்
Byமாலை மலர்11 Nov 2017 7:19 AM GMT (Updated: 11 Nov 2017 7:19 AM GMT)
குழந்தைகளுக்கு விரும்பும் வகையில் உணவு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஆலுமட்டர் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த பாஸ்மதி சாதம் - 1 கப்,
தக்காளி - 2,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 2,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தயிர் - தேவைக்கு,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் - சிறிது,
எண்ணெய், நெய் - தேவைக்கு,
புதினா, கொத்தமல்லி - அலங்கரிக்க,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உதிரியாக வடித்த பாஸ்மதி சாதத்தில் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொடியாக நறுக்கியக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு தயிர் சேர்த்து கிளறி சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் மூடி போட்டு வைத்து பின்னர் திறந்து நன்றாக கிளறி பரிமாறவும்.
விரும்பினால் புதினா, கொத்தமல்லி லேசாக சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிரியாக வடித்த பாஸ்மதி சாதம் - 1 கப்,
தக்காளி - 2,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 2,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தயிர் - தேவைக்கு,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் - சிறிது,
எண்ணெய், நெய் - தேவைக்கு,
புதினா, கொத்தமல்லி - அலங்கரிக்க,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உதிரியாக வடித்த பாஸ்மதி சாதத்தில் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொடியாக நறுக்கியக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு தயிர் சேர்த்து கிளறி சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் மூடி போட்டு வைத்து பின்னர் திறந்து நன்றாக கிளறி பரிமாறவும்.
விரும்பினால் புதினா, கொத்தமல்லி லேசாக சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X