என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா
Byமாலை மலர்24 Oct 2017 9:45 AM GMT (Updated: 24 Oct 2017 9:45 AM GMT)
சப்பாத்தி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காடை பெப்பர் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காடை - 4
பெரிய வெங்காயம் - 2
தயிர் - அரை கப்
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு காடையை போட்டு 5 நிமிடம் போட்டு பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும். இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும்.
15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான காடை பெப்பர் மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காடை - 4
பெரிய வெங்காயம் - 2
தயிர் - அரை கப்
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு காடையை போட்டு 5 நிமிடம் போட்டு பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும். இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும்.
15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான காடை பெப்பர் மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X