என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் கீமா வடை
Byமாலை மலர்2 Oct 2017 6:33 AM GMT (Updated: 2 Oct 2017 6:33 AM GMT)
குழந்தைகளும் சாப்பிடும் வகையில், எப்படி மட்டனை சமைக்கலாம் என்று பார்க்கலாம். இன்று மட்டன் கீமா வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
பொட்டுக்கடலை - 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாயத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பொட்டுக்கடலை, கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், பட்டை, சோம்பு, கசகசா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியைச் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து கறி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த பொட்டுக்கடலை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் தட்டிய கறி உருண்டைகளைச் சேர்த்து சிவக்க பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக சாப்பிடக்கூடிய சுவையான மட்டன் கீமா வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொத்துக்கறி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒன்று
பொட்டுக்கடலை - 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாயத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பொட்டுக்கடலை, கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், பட்டை, சோம்பு, கசகசா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியைச் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து கறி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த பொட்டுக்கடலை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் தட்டிய கறி உருண்டைகளைச் சேர்த்து சிவக்க பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக சாப்பிடக்கூடிய சுவையான மட்டன் கீமா வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X