search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயாசம்
    X

    நவராத்திரி பிரசாதம் : தேங்காய் பால் பருப்பு பாயாசம்

    நவராத்திரி ஒன்பது நாளும் காலையிலும், மாலையிலும் தினந்தோறும் அம்பாளுக்கு நிவேதனம் செய்து வழிபடுவது நமது வழக்கம். இன்று தேங்காய் பால் பருப்பு பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    வெல்லத்தூள் - ஒரு கப்,
    தேங்காய்ப் பால் - ஒரு கப்,
    ஏலக்காய்த் தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    முந்திரி - 10.



    செய்முறை :

    பாசிப்பருப்புடன் கடலைப் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்றாக மலர வேக விடவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கி வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் வெல்லக் கரைசல், வேக வைத்த பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

    மேலே முந்திரி அலங்கரித்து பரிமாறலாம்.

    சூப்பரான தேங்காய் பால் பருப்பு பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×