என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு
Byமாலை மலர்29 Aug 2017 9:38 AM GMT (Updated: 29 Aug 2017 9:38 AM GMT)
செட்டிநாடு ஸ்டைல் குழம்பு என்றால் பல பேருக்கு கொள்ளை பிரியம். இன்று செட்டிநாடு ஸ்டையில் நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி - 1 கிலோ
பட்டை, கிராம்பு - 2
சோம்புத்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 250 கிராம்
சிறிய வெங்காயம் - 250 கிராம்
எண்ணெய் - 250 கிராம்
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டு கோழி - 1 கிலோ
பட்டை, கிராம்பு - 2
சோம்புத்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 250 கிராம்
சிறிய வெங்காயம் - 250 கிராம்
எண்ணெய் - 250 கிராம்
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X