என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான சோயா வெஜ் குருமா
Byமாலை மலர்29 Aug 2017 7:30 AM GMT (Updated: 29 Aug 2017 7:30 AM GMT)
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சத்தான சோயா வெஜ் குருமாவை இன்று செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா பீன்ஸ் - 1 கப்
பீன்ஸ் - 5
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை பட்டாணி- ¼ கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4
இஞ்சி - 1 பெரிய துண்டு
தேங்காய் - 2 கீற்று
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லைதழை - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதல் நாள் இரவே ஊறவைத்த சோயாபீன்சை குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
கசகசா, வெள்ளை எள், ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் ஆறியவுடன் அதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயத்தை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.
தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.
காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
நன்கு வதங்கி வாசனை வந்தபின் வேக வைத்த சோயாபீன்ஸ், காய்கறிகளைப்போட்டு கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.
10 நிமிடம் கழித்து காய் வெந்தவுடன், தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.
2 நிமிடம் கழித்து கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.
சுவையான சோயா வெஜ் குருமா தயார்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா பீன்ஸ் - 1 கப்
பீன்ஸ் - 5
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை பட்டாணி- ¼ கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4
இஞ்சி - 1 பெரிய துண்டு
தேங்காய் - 2 கீற்று
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லைதழை - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதல் நாள் இரவே ஊறவைத்த சோயாபீன்சை குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
கசகசா, வெள்ளை எள், ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் ஆறியவுடன் அதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயத்தை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.
தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.
காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
நன்கு வதங்கி வாசனை வந்தபின் வேக வைத்த சோயாபீன்ஸ், காய்கறிகளைப்போட்டு கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.
10 நிமிடம் கழித்து காய் வெந்தவுடன், தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.
2 நிமிடம் கழித்து கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.
சுவையான சோயா வெஜ் குருமா தயார்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X