search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான நெத்திலி மீன் தொக்கு
    X

    சூப்பரான நெத்திலி மீன் தொக்கு

    சம்பார் சாதம், பழைய சாதத்திற்கு தொட்டு கொள்ள நெத்திலி மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 1/2 கிலோ
    பச்சை மிளகாய் - 5
    மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    தேங்காய்ப் பால் - அரை கோப்பை
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    நெத்திலி மீனில் இருந்து முள்ளெடுத்து, உப்பு போட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து வைக்கவும்.

    புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயத்தை போட்டு தாளித்த பின்னர் பூண்டை தட்டி போடவும்.

    பூண்டு லேசாக வதங்கியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.



    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்திருக்கும் நெத்திலி, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும்.

    நெத்திலி கொதித்து கெட்டியாகி தொக்கு பதம், வந்தவுடன் கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

    சூப்பரான நெத்திலி மீன் தொக்கு ரெடி.

    குறிப்பு :

    1. நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.சாப்பிடும் போது ஒரு
    முள் கூட இருக்காது.

    2. நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போட வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×