search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி
    X

    தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி

    தேங்காய் பர்ஃபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்கடலையை வைத்து சத்தான சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 200 கிராம்,
    நெய் - 200 கிராம்,
    சர்க்கரை - 300 கிராம்,
    முந்திரி, பாதாம் - தேவையான அளவு,
    ஏலக்காய் தூள் - சிறிதளவு,
    தேங்காய்த் துருவல் - சிறிதளவு.



    செய்முறை :

    வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.

    சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.

    சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×