என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சைடிஷ் பேபிகார்ன் மஞ்சூரியன்
Byமாலை மலர்17 Aug 2017 7:28 AM GMT (Updated: 17 Aug 2017 7:28 AM GMT)
புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபிகார்ன் மஞ்சூரியன். இந்த மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபிகார்ன் - 1 பாக்கெட்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கடலை மாவு - கால் கப்,
சோள மாவு - கால் கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
சோள மாவு (கரைத்து ஊற்ற) - 1 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - அலங்கரிக்க,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
பேபிகார்னை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்த மாவில் பேபிகார்னை முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும் என்றில்லை.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
இத்துடன் பொரித்த பேபி கார்னை சேர்த்து கலந்து அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி இறக்கவும்.
கடைசியாக மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேபிகார்ன் - 1 பாக்கெட்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கடலை மாவு - கால் கப்,
சோள மாவு - கால் கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
சோள மாவு (கரைத்து ஊற்ற) - 1 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - அலங்கரிக்க,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
பேபிகார்னை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்த மாவில் பேபிகார்னை முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும் என்றில்லை.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
இத்துடன் பொரித்த பேபி கார்னை சேர்த்து கலந்து அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி இறக்கவும்.
கடைசியாக மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X