என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி
Byமாலை மலர்16 Aug 2017 7:20 AM GMT (Updated: 16 Aug 2017 7:20 AM GMT)
பிரியாணி செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 300 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய்- 3
முந்திரி - 10
எலுமிச்சம் பழம் - 1
பச்சை மிளகாய் - 10
தயிர் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
நெய் - 4 கரண்டி
எண்ணெய் - 2 கரண்டி
கேசரி பவுடர்- 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.
பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும்.
மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி - பூண்டு விழுதுடன் அரைக்கவும்.
பெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும்.
கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும்.
அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதக்கியவுடன் தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 300 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய்- 3
முந்திரி - 10
எலுமிச்சம் பழம் - 1
பச்சை மிளகாய் - 10
தயிர் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
நெய் - 4 கரண்டி
எண்ணெய் - 2 கரண்டி
கேசரி பவுடர்- 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.
பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும்.
மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி - பூண்டு விழுதுடன் அரைக்கவும்.
பெரிய வெங்காயம், மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும்.
கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும்.
அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின், இதனுடன் தயிர், கழுவி சுத்தம் செய்த கோழிக்கறியை போட்டு, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதக்கியவுடன் தேங்காய் பால், கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறி மூடவும்.
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X