என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான... ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்
Byமாலை மலர்14 July 2017 9:55 AM GMT (Updated: 14 July 2017 9:55 AM GMT)
குடைமிளகாயையும், உருளைக்கிழங்கையும் கொண்டு அற்புதமான ரெசிபி ஒன்றை செய்யலாம். அது தான் ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 4
உருளைக்கிழங்கு - 4
பச்சை பட்டாணி - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* குடை மிளகாயில் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கி விட்டு அதில் உள்ள விதையை எடுத்து விடவும்.
* உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.
* கடைசியாக வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* குடை மிளகாயின் உள்ளே வதக்கிய உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களை அடுக்கி வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
* குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குடைமிளகாய் - 4
உருளைக்கிழங்கு - 4
பச்சை பட்டாணி - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* குடை மிளகாயில் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கி விட்டு அதில் உள்ள விதையை எடுத்து விடவும்.
* உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.
* கடைசியாக வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு, பச்சை வாசனை போக கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* குடை மிளகாயின் உள்ளே வதக்கிய உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெயானது சூடானதும், தீயை குறைத்து வாணலியில் குடைமிளகாய்களை அடுக்கி வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியை திறந்து, குடைமிளகாயை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதேப்போன்று குடைமிளகாய் நன்கு வேகும் வரை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
* குடைமிளகாய் நன்கு வெந்த பின்னர், அதனை இறக்கி பரிமாறினால், சுவையான ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X