search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி
    X

    மணக்கும் மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி

    மீன் குழம்பில் தேங்காய் பால் ஊற்றி செய்யும் போது சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் பால் ஊற்றி மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன்
    சின்னவெங்காயம் - 3
    தக்காளி - 2
    சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
    பச்சைமிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
    முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
    இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    * கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

    * அடுத்து அதில் இரண்டாவது தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    * மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×