என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி
Byமாலை மலர்13 July 2017 10:01 AM GMT (Updated: 13 July 2017 10:01 AM GMT)
பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த பால் போளி சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த பால் போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப்,
சர்க்கரை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு - முக்கால் கப்,
கார்ன்ஃப்ளார் - கால் கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
பால் - 7 கப்,
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
* பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.
* பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
* பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடி வைக்கவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு)
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.
* பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்.
* சூப்பரான பால் போளி ரெடி.
குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப்,
சர்க்கரை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு - முக்கால் கப்,
கார்ன்ஃப்ளார் - கால் கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
பால் - 7 கப்,
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
* பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.
* பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
* பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடி வைக்கவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு)
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.
* பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்.
* சூப்பரான பால் போளி ரெடி.
குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X