என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் புலாவ்
Byமாலை மலர்12 July 2017 7:30 AM GMT (Updated: 12 July 2017 7:30 AM GMT)
குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த கார்ன் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்
வேகவைத்து உரித்த கார்ன் முத்துக்கள் - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி விழுது - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
செய்முறை :
* புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
* இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, கார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும்.
* அடுத்து அதில் அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும்.
* ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - ஒரு கப்
வேகவைத்து உரித்த கார்ன் முத்துக்கள் - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி விழுது - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
செய்முறை :
* புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
* இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, கார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும்.
* அடுத்து அதில் அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும்.
* ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X