search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி?
    X

    பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி?

    பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மோர் - 2 கோப்பை
    பருப்பு வடை - 7
    துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
    துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
    பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
    கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 10
    வற்றல் மிளகாய் - 3
    பெருங்காயம் - 2 சிட்டிகை
    மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு

    தாளிக்க :

    கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா கால் ஸ்பூன்
    கறிவேப்பிலை.



    செய்முறை :

    * மோரை நன்றாக கரைத்து வைக்கவும்.

    * துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * மிக்சியில் ஊறவைத்த பொருட்களை போட்டு அதனுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த பின் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மோரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.

    * சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் அடுப்பை அணைத்து விட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.

    * வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.

    * பருப்பு வடை மோர்க்குழம்பு ரெடி.

    குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×