என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி?
Byமாலை மலர்1 July 2017 9:52 AM GMT (Updated: 1 July 2017 9:52 AM GMT)
பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மோர் - 2 கோப்பை
பருப்பு வடை - 7
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 10
வற்றல் மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு
தாளிக்க :
கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா கால் ஸ்பூன்
கறிவேப்பிலை.
செய்முறை :
* மோரை நன்றாக கரைத்து வைக்கவும்.
* துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* மிக்சியில் ஊறவைத்த பொருட்களை போட்டு அதனுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த பின் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மோரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.
* சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் அடுப்பை அணைத்து விட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
* வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.
* பருப்பு வடை மோர்க்குழம்பு ரெடி.
குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மோர் - 2 கோப்பை
பருப்பு வடை - 7
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 10
வற்றல் மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு
தாளிக்க :
கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா கால் ஸ்பூன்
கறிவேப்பிலை.
செய்முறை :
* மோரை நன்றாக கரைத்து வைக்கவும்.
* துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* மிக்சியில் ஊறவைத்த பொருட்களை போட்டு அதனுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த பின் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மோரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.
* சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் அடுப்பை அணைத்து விட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
* வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.
* பருப்பு வடை மோர்க்குழம்பு ரெடி.
குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X