search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாதத்திற்கு சூப்பரான வான்கோழி குழம்பு
    X

    சாதத்திற்கு சூப்பரான வான்கோழி குழம்பு

    வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    வான்கோழி - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    மசாலாவிற்கு...

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

    * பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, மல்லித் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் என அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.

    * மசாலா வாசனை போனவுடன் அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக  இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×