என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
Byமாலை மலர்29 May 2017 9:53 AM GMT (Updated: 29 May 2017 9:54 AM GMT)
வெஜிடபிள் பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய் பால், வெஜிடபிள் சேர்த்து செய்யும் இந்த பிரியாணி சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப்,
பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
பிரியாணி இலை - ஒன்று,
கிராம்பு - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பீன்ஸ் - 10,
பெரிய வெங்காயம் - 2 ,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 ,
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப. மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும்.
* வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.
* குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, விசில் போடவும்.
* 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப்,
பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
பிரியாணி இலை - ஒன்று,
கிராம்பு - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பீன்ஸ் - 10,
பெரிய வெங்காயம் - 2 ,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 ,
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப. மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும்.
* வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.
* குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, விசில் போடவும்.
* 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X