search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பேச்சிலர் சமையல்: தக்காளி குழம்பு செய்வது எப்படி
    X

    பேச்சிலர் சமையல்: தக்காளி குழம்பு செய்வது எப்படி

    தக்காளி குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சுவையும் சூப்பராக இருக்கும். இன்று தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
    பச்சை மிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    * எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    * தக்காளி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×