search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி
    X

    சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி

    அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    புதினா - கைப்பிடியளவு,
    கிராம்பு - 2,
    பட்டை - ஒரு துண்டு,
    ஏலக்காய் - 4,
    உருளைக்கிழங்கு - 2 ,
    கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  
    பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
    தயிர் - கால் கப்,
    புதினா இலை - கைப்பிடியளவு,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

    அலங்கரிக்க :

    பொரித்த பிரட்,
    பொரித்த வெங்காயம்,
    புதினா இலை - தேவையான அளவு.



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    * உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    * குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

    * இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.

    * பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    * சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×