என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு
Byமாலை மலர்15 May 2017 10:07 AM GMT (Updated: 15 May 2017 10:07 AM GMT)
குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் அரிசி மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* கேழ்வரகு முறுக்கு ரெடி.
* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்… ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* அடுத்து கேழ்வரகு மாவை போட்டு வறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் அரிசி மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* கேழ்வரகு முறுக்கு ரெடி.
* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்… ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X