search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

    மாலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,
    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×