search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி
    X

    வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

    சப்பாத்தி, இட்லி, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு


     
    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

    * சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×