search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி
    X

    ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

    ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று கேட்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 200 கிராம்,
    பாசுமதி அரிசி - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று),
    தக்காளி - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி,
    நெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    பட்டை, சோம்பு, ஏலக்காய்,



    செய்முறை :


    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை வேக விட்டு இறக்கவும்.

    * பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் உதிரியாக வேகவைத்து எடுக்கவும்.

    * வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கி வரும் போது உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    *  சூப்பரான ராஜ்மா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×