என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி
Byமாலை மலர்26 April 2017 7:28 AM GMT (Updated: 26 April 2017 7:28 AM GMT)
சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த ஆலு மட்டர் சப்ஜி. இன்று இந்த ஆலு மட்டர் சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
தண்ணீர் - தேவையான அளவு
பச்சை பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
செயல்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக குழைய வேகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
* இப்போது இதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.
* உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
தண்ணீர் - தேவையான அளவு
பச்சை பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
செயல்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக குழைய வேகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
* இப்போது இதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கறியை நன்கு கொதிக்க விடவும்.
* உருளைக்கிழங்குகளை லேசாக மசித்து விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* இப்போது, உங்களுடைய ஆலுமட்டர் சப்ஜி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X