search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி
    X

    மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 2
    ரவை - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையுடன் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, எண்ணெய் 1 ஸ்பூன், அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    * பிசைந்த மாவை பூரியாக உருட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரி மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சத்தான மாலைநேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×