என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர டிபன் சேமியா கிச்சடி
Byமாலை மலர்19 April 2017 9:45 AM GMT (Updated: 19 April 2017 9:45 AM GMT)
மாலையில் பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு சூப்பரான எளிய முறையில் செய்யக்கூடிய சேமியா கிச்சடி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
* சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.
* அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
* சேமியா கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியா - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
கேரட் - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
* சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.
* அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
* சேமியா கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X