search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்
    X

    மாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்

    மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்பட்டால் தக்காளி இடியாப்பம் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிமையானது. இந்த இடியாப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் - 1 பாக்கெட்
    வெங்காயம் - 2  
    தக்காளி - 3
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பொடி/மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடானதும், அதில் ரெடிமேட் இடியாப்பத்தைப் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    * தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டவும்.

    * கடைசியாக அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×