search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான வெந்தய மசாலா சாதம்
    X

    சூப்பரான வெந்தய மசாலா சாதம்

    ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 300 கிராம்
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    கீறிய பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பூண்டு - 10 பல்
    சின்ன வெங்காயம் - 15
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் - ஒரு மூடி
    சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

    * பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும்.

    * இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    * இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும்.

    * கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

    * சூப்பரான வெந்தய மசாலா சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×