search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி
    X

    உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

    ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் - 10
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

    * சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

    * நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.

    * வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    * அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    * சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

    * இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×