என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி
Byமாலை மலர்14 March 2017 10:00 AM GMT (Updated: 14 March 2017 10:00 AM GMT)
மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 1/4கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் + நெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடிக்க :
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5பல்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
செய்முறை :
* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.
* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.
* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
* சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்மதி அரிசி - 1 1/4கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் + நெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடிக்க :
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5பல்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
செய்முறை :
* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.
* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.
* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
* சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X