search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி
    X

    கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி

    மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - 250 கிராம்
    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
    தயிர் - ஒரு கப்
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    * கத்தரிக்காயை நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

    * தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.

    * புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    * துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து, கத்தரிக்காயைப் போட்டு வேக விடவும்.

    * கத்தரிக்காய் வெந்ததும் அரைத்த தனியா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    * பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்த மோரை ஊற்றி இறக்கவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மோரில் கொட்டவும்.

    * சூப்பரான கத்தரிக்காய் மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×